"HDFC வங்கி மேனேஜர் கந்துவட்டி.... கும்பலுடன் டீலிங்".. பரபரப்பு புகார்...

Update: 2023-07-09 11:22 GMT

வாடிக்கையாளரின் முடக்கப்பட்ட வங்கி கணக்கில் கந்து வட்டிக்காரர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்த தனியார் வங்கி மேலாளர் மீது பாதிக்கப்பட்டவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், அசோக் நகரை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரிடம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த இசக்கி ராஜா என்பவர், வட்டி உடன் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

கடன் பெறும் போது, வழங்கப்பட்ட காசோலையை, சொக்கலிங்கம், சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள எச்டிஎப்சி வங்கி கிளையில் ஐந்து காசோலையை கொடுத்து மூன்று லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இசக்கி ராஜா மாம்பலம் வங்கிக் கிளையின் மேலாளரிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்காததால் பாதிக்கப்பட்ட இசக்கி ராஜா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்