கொடைக்கானல் செல்லும் ஆளுநர்.. சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா தலங்களில் அனுமதி மறுக்கப்படும் என தகவல்
கொடைக்கானலுக்கு ஆளுநர் வருகை தருவதை முன்னிட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு, 500 - க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் தீவிரமடைந்துள்ளன. ஆளுநர் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார்.
வருகின்ற 14-ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை தமிழ்நாடு ஆளுநர் ரவி, கொடைக்கானல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக கொடைக்கானல் - வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக சுற்றுலாத்தலங்களுக்குள் சுற்றுலாப்பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.