கல்லூரி அருகே நிறுத்தாத அரசு பஸ்ஸால் செமஸ்டர் தேர்வுக்கு லேட்.. பயத்தில் கீழே குதித்த மாணவி பலி - கர்நாடகாவில் அதிர்ச்சி

Update: 2023-04-16 03:16 GMT

கர்நாடகாவில் பேருந்து தன் கல்லூரி அருகே நிற்காத நிலையில் பேருந்தில் இருந்து குதித்த கல்லூரி மாணவி தலையில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

கர்நாடக மாநிலம் ஹோலாலு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்வேதா. இவர் ஹூலிகுட்டா பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று செமஸ்டர் தேர்வுக்காக அரசுப் பேருந்தில் சென்ற ஸ்வேதா, தன் கல்லூரி அருகே பேருந்தை நிறுத்த சொல்லியிருக்கிறார். ஆனால் பேருந்தை ஓட்டுநர் நிறுத்த மறுத்த நிலையில் திடீரென பேருந்தில் இருந்து குதித்திருக்கிறார் ஸ்வேதா. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரம் பேருந்தை நிறுத்த மறுத்தது ஏன்? என்பது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்