ரூ.20 கடனுக்காக தாக்கிய கடன்காரர்கள் - அடி தாங்க முடியாமல் தண்டவாளத்தில் கைகளை தூக்கி நின்ற இளைஞர்
உத்தரப்பிரதேசத்தில் எட்டவா மாவட்டம் பர்தானா பகுதியில், சலீம் என்ற இளைஞரை, கடை ஒன்றில் 20 ரூபாய் திருப்பித் தராததால், கடன் கொடுத்தவர்கள் தாக்கியுள்ளனர்.
வலி தாங்க முடியாமல் அங்கிருந்து ஓடிய சலீம், ரயில்வே கேட்டை கடந்து, ரயில் வந்து கொண்டிருந்த தண்டவாளத்தில் கைகளை தூக்கி நின்றார்.
அப்போது, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.