மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு

Update: 2023-02-26 09:14 GMT
  • குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை செயல்படுத்துவது குறித்த விவாதம் மேற்கொள்ள மாநிலங்களின் முதன்மை செயலர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • டெல்லியை சேர்ந்த 'வி தி உமன் ஆஃப் இந்தியா' (We the women of india) என்ற அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் விசாரணை செய்தது.
  • இதையடுத்து, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதிக்க மாநிலங்களின் முதன்மை செயலாளர்களின் கூட்டத்துக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 3 வாரத்திற்குள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது.
  • இக்கூட்டத்தில், நிதி, உள்துறை, சமூக நலம் ஆகிய துறைகளின் செயலர்களும், தேசிய மகளிர் ஆணையம், தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்