செல்போனில் கேம் விளையாடினாள் இப்படியும் நடக்குமா? இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்...

Update: 2023-04-05 14:34 GMT

சென்னை பம்மதுகுளம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் பணி புரிந்து வந்தவர் ஹரிதன் பூரி. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இவர், திருவள்ளூர் மப்பேடு அருகே நண்பர்களுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த ஹரிதன் பூரி, திடீரென மயங்கி விழுந்த மூச்சு பேச்சில்லாமல் இருந்த நிலையில், நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசாரின் விசாரணையில், எந்த நேரமும் ஹரிதன் பூரி செல்போன் விளையாடி கொண்டே இருந்ததாக நண்பர்கள் தெரிவித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்