வலியை தாங்கிக்கொண்டு சொந்த ஊர் போய் விடலாம் என கிளம்பிய இளைஞர் - சென்னையில் பிரிந்த உயிர்

Update: 2023-06-12 02:45 GMT

கோவை பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் அவினாஷ். இவர் சென்னையில் பணியாற்றி வந்தார். அவினாஷ்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், மடிப்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து, ஆட்டோவில் புறப்பட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். பேருந்து நிலையம் வந்ததும் ஆட்டோ ஓட்டுநர் அவினாஷை இறங்கச் சொல்லியபோது, அவர் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அல்சர் பிரச்சினை காரணமாக அவினாஷ் நீண்ட நாட்களாக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது தெரியவந்தது. உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே இறப்பிற்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்