``சீனாவில் பார்த்தது இல்லை'' பயபக்தியுடன் மிரண்ட சீனர்கள்... தமிழகர்களாய் மாறி ஆயுத பூஜை கொண்டாட்டம்

Update: 2024-10-12 09:54 GMT
  • கற்சிற்பக்கலை கூடத்துக்குள் திடீர் விருந்தாளியாக புகுந்த சீன சுற்றுலா பயணிகள் சிற்பத் தொழிலாளர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடினர்...
  • மாமல்லபுரம் ஐந்துரதம் சாலையில் உள்ள கற்சிற்ப கூடத்தில் சிற்ப தொழிலாளர்கள் ஆயுத பூஜை கொண்டாடினர்... அப்போது அவ்வழியே
  • புராதன சின்னங்களை கண்டுகளிக்க சென்று கொண்டிருந்த சீன சுற்றுலா பயணிகளான ஜாங் மற்றும் சிக்காய் ஆகியோர் திடீர் விருந்தாளியாக உள்ளே நுழைந்து ஆயுத பூஜை கொண்டாட்டத்தைக் கண்டு திகைத்துப் போயினர்... மேலும் தாங்களும் பெய்ஜிங் நகரில் கால் ஷூ தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தான் என்றும்,
  • இதுபோல் தொழிலாளர்களுக்காக கொண்டாடப்படும் பண்டிகையை சீனாவில் பார்த்தது கிடையாது எனவும் ஆச்சரியப்பட்டனர்... அத்துடன் இருவரும் சிற்பக் கலைஞர்களாகவே மாறி உளி, சுத்தியலால் பயபக்தியுடன் கல் செதுக்கி ஆயுத பூஜை கொண்டாடி மகிழ்ந்தனர். காலணிகளைக் கழற்றி விட்டு பயபக்தியுடன் சாமிக்கு கற்பூர ஆராதனை செய்து வணங்கினர். 
Tags:    

மேலும் செய்திகள்