திடீரென தீப்பிடித்த படகு... துடிதுடித்த பயணி - காப்பாற்ற போராடிய சக பயணிகள்

பிலிப்பைன்சில் படகு தீப்பிடித்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

Update: 2022-05-23 10:21 GMT
திடீரென தீப்பிடித்த படகு... துடிதுடித்த பயணி - காப்பாற்ற போராடிய சக பயணிகள்

பிலிப்பைன்சில் படகு தீப்பிடித்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 134 பயணிகளை ஏற்றிக் கொண்டு தலைநகர் மணிலாவிலிருந்து கிழக்கே சுமார் 60 கிமீ தொலைவில் உள்ள கியூசான் மாகாணத்தில் இருக்கும் ரியல் துறைமுகத்தை அடைவதற்கு முன்பாக திடீரென்று படகு தீப்பிடித்தது. இதில், 5 பெண்கள் பெண்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 120 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் 23 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன 7 பயணிகளைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்