"இந்தியா மிகச்சிறந்த கூட்டாளி" - ஜெர்மன் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸு பேச்சு

ஜி-7 நாடுகளின் மாநாட்டில் விருந்தினராக கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு, ஜெர்மன் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸு அழைப்பு விடுத்தார்.

Update: 2022-05-02 20:46 GMT
ஜி-7 நாடுகளின் மாநாட்டில் விருந்தினராக கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு, ஜெர்மன் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸு அழைப்பு விடுத்தார். ஜெர்மனியில் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜெர்மன் பிரதமர், பொருளாதாரம், பாதுகாப்பு கொள்கைகள், பருவநிலை மற்றும் அரசியல் போன்ற பல்வேறு விவகாரங்களில், ஜெர்மனிக்கு ஆசியாவில் மிகச்சிறந்த கூட்டாளியாக இந்தியா விளங்குவதாக பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து, உணர்வற்ற கொலைகளை முடிவுக்கு கொண்டு வர, போரை முடிவுக்கு கொண்டு வருமாறு, ரஷ்யாவுக்கு, ஜெர்மன் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்