இலங்கை மீனவர்களை கைது செய்த இந்திய கடற்படையினர்

இலங்கை திரிகோண மலையைச் சேர்ந்த 6 மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த நிலையில், அவர்களை இந்திய கடற்படையினர் கைது..

Update: 2022-05-02 09:47 GMT
இலங்கை மீனவர்களை கைது செய்த இந்திய கடற்படையினர்


இலங்கை திரிகோண மலையைச் சேர்ந்த 6 மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த நிலையில், அவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்து காரைக்கால் துறைமுகத்துக்கு இன்று அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்களிடம் கடலோர காவல் குழும ஆய்வாளர் ராஜா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அனுரா என்பவருக்குச் சொந்தமான விசை படகில் கடந்த 21ம் தேதி திரிகோண மலையில் இருந்து மீன் பிடிக்க வந்து எல்லை தாண்டி மீன் பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து மதுஷா, அமிலா மசங்கா, சுஜித் பண்டாரா, புதிகா, உஷன் மதுசன், துங்கா மகேலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த நாகை கடலோர காவல் குழும போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்