ஓணத்தில் உலகசாதனை.. அனைவரையும் ஈர்த்த பிரமாண்ட படைப்பு.. கொச்சியில் நடந்த சுவாரஸ்யம்..

Update: 2023-08-29 02:33 GMT

கேரள மக்களின் வசந்த விழாவான திருவோண பண்டிகை, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்

கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள பிரபல தனியார் மாலில் ஓணம் பண்டிகைக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட தொங்கும் செயற்கை மலர் படுக்கை காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 30 அடி விட்டத்தில் 450 கிலோ எடை கொண்ட செயற்கை மலர்களால் ஆன மலர் படுக்கையை 35க்கும் மேற்பட்டோர் 8 நாட்களில் வடிவமைத்துள்ளனர். பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, இந்த பிரம்மாண்ட மலர் படுக்கையை உலக சாதனை சங்கமும் அங்கீகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்