மக்களே உஷார்.. "அடுத்த 4 நாட்கள்".. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. | Weather Update

Update: 2024-10-10 14:34 GMT

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 13 மாவட்டங்களில், அடுத்த 4 தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல், கரூர், நாமக்கல் உள்ளிட்ட 13 இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 13-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்