நெல்லை மாநகராட்சி ஆணையாளருக்கு பிடிவாரண்ட் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Update: 2023-11-08 03:33 GMT

நெல்லை மாநகராட்சி தியாகராஜ நகர் பகுதியை சேர்ந்தவர் அழகு ரத்தினம். புதிய குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக இவரிடம், 2 முறை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், அழகு ரத்தினத்திற்கு 24 ஆயிரத்து 500 ரூபாய் இழப்பீடு வழங்க, கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் இழப்பீடு வழங்கப்படாததால், அவர் மீண்டும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை அனுகினார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் ஆகியோருக்கு, பிடிவாரண்டு பிறப்பித்து ஆணையிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்