பிள்ளைகளால் கழிவறையில் வசித்து கண்ணீர் ததும்ப ததும்ப பேசிய தாய்.. "சாப்பாடு சமையல் எல்லாமே இங்க தான்

Update: 2024-07-21 08:14 GMT

விழுப்புரம் மாவட்டம், வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. 70 வயது மூதாட்டியான இவர், தற்போது வசிப்பதற்கு வீடு இல்லாமல் கழிவறையில் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், மூதாட்டியை பராமரிக்காமல் அவரது பிள்ளைகளும் கைவிட்டுள்ளனர். இதனிடையே, மூதாட்டி வசித்து வந்த குடிசை வீடு கடந்த ஆண்டு முற்றிலும் சேதமடைந்து இடிந்து விட்டதால், தொகுப்பு வீடு கேட்டு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், மூதாட்டி வசித்த வீட்டிற்கு பட்டா இல்லாததால், அரசு வழங்கும் தொகுப்பு வீடு தர முடியாத சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கழிவறையில் வசிக்கும் அவல நிலைக்கு மூதாட்டி தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில், தான் பாதுகாப்பாக வசிப்பதற்கு தனக்கு ஒரு வீடு கட்டித் தர அவர் கோரிக்கை விடுத்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்