பத்திரிக்கை அடித்து 12ம் வகுப்பு மாணவிக்கு பள்ளியில் வளைகாப்பு செய்த மாணவிகள் - அதிர்ந்த பெற்றோர்

Update: 2024-09-19 16:40 GMT

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிகள் சிலர் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்று, பத்திரிக்கை தயார் செய்து பள்ளியின் மேலே உள்ள தளத்தில் வளைகாப்பு போன்ற நிகழ்வை நடத்தியும் உள்ளனர். வளைகாப்புக்குத் தேவையான பொருள்களை வைத்து அசல் வளைகாப்பு போன்றே நிகழ்த்தப்பட்டது. இந்த ரீல்ஸ் இன்ஸ்டாவில் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழியிடம் கேட்ட போது, இது மாணவிகள் தொடர்பான பிரச்சனை என்பதால் நிதானமாக தீர விசாரித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பள்ளி தலைமை ஆசிரியரை அழைத்து விசாரித்துள்ளதாகவும், இப்போதைக்கு அந்த பள்ளியில் மட்டும் மதிய உணவு இடைவேளையின் போது ஆசிரியர்களையும் மாணவிகளோடு அமர்ந்து சாப்பிட அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இனி கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும், அந்த மாணவிகளின் பெற்றோரை அழைத்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்