களத்தில் நேராக இறங்கிய வருண் IPS..அடுத்த நொடியே பகிரங்க மன்னிப்பு-பெரும் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி

Update: 2024-08-30 11:13 GMT

மாணவிக்கு பாலியல் தொல்லை வழங்கப்பட்டதை கண்டித்து திருச்சி என்ஐடி மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக விடுதியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து, என்ஐடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தால் விடுதி வார்டன், பாதிக்கப்பட்ட மாணவியின் ஆடைகுறித்து தரக்குறைவாக பேசியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள். இறுதியாக விடுதி காப்பாளர் மாணவர்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கோரியதை தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்