பிரபல ரவுடி உயிரை பறித்த தகாத உறவு - தூக்கத்திலேயே உயிரை எடுத்த தம்பி

Update: 2024-09-14 14:47 GMT

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்து உள்ள பனையகுறிச்சியை சேர்ந்தவர் பிரபல ரவுடி காக்கா என்கின்ற சுந்தர்ராஜ்.இவர் மீது கொலை கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவரது வீட்டு மாடியில் வெட்டி கொலை செய்ப்பப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரிமளா என்பவருடன் சுந்தர்ராஜ் தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பரிமளாவின் சகோதரர் கணேச மூர்த்தி சுந்தர்ராஜை வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது.இதனைத் தொடர்ந்து கணேச மூர்த்தி உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்