40 மணி நேர போராட்டம்... கிடைக்குமா தீபாவளி போனஸ்? | Trichy | Diwali

Update: 2024-10-24 09:48 GMT

திருச்சியில், ஒரு மாத ஊதியம் போனசாக வழங்க கோரி, 40 மணி நேரத்தை கடந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை கண்டித்தும், ஒரு மாத ஊதியத்தை போனசாக வழங்கக் கோரியும், கடந்த 22-ம் தேதி மாலை தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 40 மணி நேரத்தை போராட்டம் கடந்த நிலையில், தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக மாநகராட்சி செயல்படுவதாக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்