சென்னையை சுத்து போடும் இருள்... உச்சகட்ட அலர்ட்... ஆணையர் அதிரடி உத்தரவு

Update: 2024-10-14 15:53 GMT

சென்னையில் தண்ணீர் அதிகமாக தேங்கும் என கண்டறியப்பட்ட 50 இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இது தவிர ஆயுதப்படையில் உள்ள பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 300-க்கும் மேற்பட்ட காவலர்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்பு படையினரை போன்றே சிறப்பு பயிற்சி பெற்ற காவலர்கள், 12 துணை ஆணையர் அலுவலகங்கள் 4 இணை ஆணையர் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு தனித்தனியே பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் போலீஸ் நிலையங்கள் வாரியாக தனியாக கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்