"என்ன வீடியோ எடுக்குற நீ போலீசா..?"குழந்தை காலை இடித்த IT பெண்ணை.. பஸ்ஸில் இழுத்து போட்டு அடித்த தாய்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்

Update: 2024-08-10 01:51 GMT

சென்னையை அடுத்த தாம்பரத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை, பெண்கள் இருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

மேடவாக்கத்தில் தங்கி, பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம்பெண், மாநகர பேருந்தில் அலுவலகம் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென பக்கத்தில் குழந்தையுடன் இருந்த பெண்ணும், அவரது தாயாரும், இளம்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர். பேருந்து ஓட்டுநர் இரும்புலியூரில் நிறுத்தி, போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை நடத்தியபோது, மேற்கு வங்க இளம்பெண், தெரியாமல், குழந்தையின் காலை இடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பெண் மீது, குழந்தையுடன் வந்த பெண் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்