பள்ளி மாணவியை கடித்த பாம்பை அடித்துக் கொன்று, பையில் எடுத்து வந்த சம்பவத்தால் திருத்தணி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-10-24 10:05 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகையில், தன் வீட்டின் அருகே நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த ஏழாம் வகுப்பு மாணவி இளவரசியை, பாம்பு கடித்தால், வலியால் துடித்துள்ளார்.

இதையடுத்து மாணவியை கடித்த பாம்பை துரத்தி சென்று அடித்து கொன்ற அவரின் உறவினர்கள், அதை பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு, மாணவியுடன் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு டாக்டர்களிடம் செத்து போன பாம்பை காட்டி, மாணவியை இந்த பாம்பு தான் கடித்தது எனக் கூறி, அவருக்கு அவசர சிகிச்சை அளிக்க கோரினர். இதைக் கண்டு டாக்டர்கள் மற்றும் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். டாக்டர்கள், மாணவி இளவரசிக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பிறகு மாணவி நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்