வெள்ளாமையை நாசம் செய்த யானைகள்.. வெடி போட்டு விரட்டிய வனத்துறையினர்

Update: 2024-02-23 02:43 GMT

ஓசூர் அருகே விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர். சானமாவு போடூர்பள்ளம் வனப்குதியில் கடந்த சில நாட்களாக தஞ்சமடைந்திருந்த 4 காட்டு யானைகள் போடூர், ராமாபுரம், நாயக்கனப்பள்ளி, சானமாவு ஆகிய கிராம பகுதிகளில் விளை பயிர்களை சேதப்படுத்தி வந்தன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று யானைகளை பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறையினர், அவற்றை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்