சடலமாக வந்த சிறுவன் - கதறி அழும் பெற்றோர் - மனதை நொறுக்கும் காட்சி

Update: 2024-06-23 14:43 GMT

திருச்சியை சேர்ந்த 15 வயது சிறுவன், கொள்ளிடம் ஆற்றின் தடுப்பணை பகுதியில் குளிக்க சென்றபோது, நீரில் மூழ்கி மாயமானார். தகவலறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர் இரண்டாவது நாளாக ஆற்றில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் ட்ரோன் கேமரா உதவியுடன் சிறுவனை தேடும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் கடுமையான முயற்சிக்குப்பின் சிறுவன் ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சிறுவனின் சடலத்தை கண்டு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறிய காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்