கோடிக்கணக்கில் கூட்டுறவு வங்கியில் மொத்தமாக சுருட்டிய நிர்வாகிகள் ஷாக்கான அதிகாரிகள்

Update: 2024-10-05 08:58 GMT

வாலாஜாப்பேட்டையை அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராமத்தில் உள்ள நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் கோடிக் கணக்கில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. அதன்பேரில், கூட்டுறவுத் துறை அதிகாரிகள், அந்த சங்கத்திற்கு நேரில் சென்று பதிவேடுகளை ஆய்வு செய்ததில், அந்த சங்கத்தின் செயலாளர் சங்கர், காசாளர் பாரதி ஆகிய இருவரும் 7 கோடியே 83 லட்ச ரூபாயை போலி கணக்கு காண்பித்து கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.

பணமோசடி உறுதியான நிலையில் சங்கர், பாரதி ஆகிய இருவரையும் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். மேலும், இந்த மோசடி தொடர்பாக, வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்