புதுக்கோட்டையை நடுங்க வைத்த கொலை வழக்கு... விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Update: 2024-08-19 17:11 GMT

கரூர், வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்தாயி. 57 வயது மூதாட்டியான இவர், சில நாள்கள் முன் பெய்த கனமழையில், சின்னம்ம நாயக்கன்பட்டி அருகேயுள்ள கறிக்கடையில் ஒதுங்கி இருக்கிறார். அப்போது, மூதாட்டியை கட்டையால் தாக்கி கொன்ற மர்மநபர் ஒருவர், மூதாட்டி அணிந்திருந்த நகைகளை திருடி சென்றிருக்கிறார். இது குறித்து அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், சுக்காம்பட்டி காலனி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பழனிவேலு என்பவரை கைது செய்திருக்கின்றனர். சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த பழனிவேல், மூதாட்டியை அடித்துகொன்று நகைகளை திருடியது தெரியவர, அவரை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்