செல்ல பிராணிக்கு இறுதி சடங்கு.. கண்ணீர் மல்க பிரியாவிடை - மனதை கல்லாக்கும் வீடியோ

Update: 2024-09-18 16:12 GMT

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் வீட்டில் வளர்த்த நாய் உயிரிழந்ததை தொடர்ந்து, அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஈமச்சடங்கு செய்தனர். அருள்வேல் என்பவரது குடும்பத்தினர் கடந்த 6 ஆண்டுகளாக டேஸ் என்ற வகையைச் சேர்ந்த நாயை வளர்த்து வந்தனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த தெருநாய்கள் கடித்துக் குதறியதில், அருள்வேல் வளர்த்த நாய் உயிரிழந்துள்ளது. தாங்கள் ஆசையாய் வளர்த்த நாய் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள இயலாத அக்குடும்பத்தினர் கதறி அழுததுடன், நாய்க்கு ஈமச்சடங்கு நடத்தி, அதன் உடலை அடக்கம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்