"புழுவா வருதுங்க..." சாலை முழுவதும் நெளியும் கிருமிகள் .. செய்வதறியாது தவிக்கும் மக்கள்

Update: 2024-10-10 07:47 GMT

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில், 5 மற்றும் 10வது வார்டுகளில் சாக்கடை நீர் நிரம்பி வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். மழைகாலங்களில் தெருக்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், புகார் அளித்தும், நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பழைய சாக்கடை மீது திட்டமிடாமல் கட்டப்பட்ட சுவற்றால் கழிவுநீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்