பொது மக்கள் கூடும் இடத்தில் 3வது மதுக்கடை...பொங்கி எழுந்த பெண்கள்... பரபரப்பு காட்சி

Update: 2024-10-09 11:14 GMT

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பகுதியில் மூன்றவாதாக ஒரு மதுக்கடை கட்டப்பட்டது. கடந்த சில வாரங்களாக இப்பகுதி மக்கள், புதிய மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இரண்டு முறை போராட்டம் நடத்தி கடைக்கு பூட்டு போட்டனர். இந்த நிலையில் இன்று அந்த பகுதியில் மதுபான கடை மீண்டும் திறக்கப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தாசில்தார் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்