நடுக்கடலில் கடுமையான இடி மின்னல்.. ஒரே நாளில் நடந்த சோகம்

Update: 2024-10-06 02:37 GMT

தஞ்சை மாவட்டம் கழுமங்குடா மீன் பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று இரவு நாட்டுப் படகில் இரண்டு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற போது, திடீரென மின்னல் தாக்கியது. இதில் காளிதாஸ் என்பவர் பலத்த காயமடைந்து சுய நினைவிழந்தார். பிரபாகரன் என்பவர் காயமடைந்த நிலையில் படகை கரைக்கு கொண்டு வந்தார். பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்த இரண்டு மீனவர்களும் பட்டுக்கோட்டை கொண்டு செல்லப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்