பெட்ரோல் பங்கில் வெடித்த பயங்கர மோதல்.. சட்டக்கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு - வெளியான வீடியோ

Update: 2024-09-07 07:22 GMT

தஞ்சாவூர் மேலவீதி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் இவர் தஞ்சை ஆற்றுப் பாலம் அருகில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் தனது இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட வந்துள்ளார், அப்போது அங்கு பணிபுரியும் பெண் ஊழியருக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது,

இதையடுத்து அந்தப் பெண் ஊழியர் மர்ம நபர்களுக்கு போன் செய்துள்ளார், அதேபோல் பாலசுப்பிரமணியமும் தனது மகன் ஹரிஹரனுக்கும் (23) போன் செய்துள்ளார், இந்நிலையில் ஹரிகரன் வந்தவுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் ஹரிகரனின் முதுகில் பட்டா கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது, பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஹரிஹரன் சிகிச்சைக்காக சென்றார், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர், ஹரிகரன் எல்எல்பி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது, பட்டப் பகலில் சட்டக் கல்லூரி மாணவரை வெட்டிய சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்