கோயில் பெயரை சொல்லி வண்டி வண்டியாக திருடி சென்ற கும்பல்.. கேட்டு அதிர்ந்துபோன போலீஸ்

Update: 2024-07-21 05:19 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பிரசித்தி பெற்ற கோயில் பெயரை பயன்படுத்தி மணல் திருட முயன்ற கும்பல் போலீசாரிடம் பிடிபட்டது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கோயிலுக்காக மணல் கொண்டு செல்வதாக கூறி, தனிநபர் ஒருவருக்காக மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பல் போலீசாரிடம் சிக்கியது.

திருட்டுக்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் மற்றும் இரண்டு டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த திருட்டில் ஈடுபட்ட ஓட்டுனர்களான சரவணன், மாதவன், மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்