15 மணி நேரம் லாக்கான குடும்பம்.. சப் கலெக்ரருக்கு மீது தம்பி பரபரப்பு புகார்

Update: 2024-07-27 02:24 GMT

சொத்து தகராறில் சகோதரனை வீட்டில் வைத்த பூட்டிய சப் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது சகோதரன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் சப் கலெக்டராக இருப்பவர் கண்மணி, இவருக்கு சொந்தமான பூர்வீக வீடு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள சூடாமணிபுரத்தில்

உள்ளது. இந்த வீட்டில் வசித்த கண்மணியின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். தாயும்

கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்ததால் இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கண்மணியின் சகோதரர் ராஜா குடும்பத்துடன் பூர்வீக வீட்டில் வந்து தங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் கண்மணிக்கும், ராஜாவுக்கும் பூர்வீக சொத்தை பிரிப்பது தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்து இருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கண்மணி சம்பவத்தன்று ராஜாவை பூர்வீக வீட்டில் வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைகளுக்குப் பால் வாங்க முடியாமல் 15 மணி நேரத்திற்கும் மேலாக அடைபட்டது குறித்து, சப் கலெக்டர் மீதும் வருவாய்த்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ராஜா குடும்பத்துடன் புகார் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்