கண் மையால் பிரிந்த ஒரு வயது குழந்தையின் உயிர் - சிவகங்கையில் அதிர்ச்சி

Update: 2024-09-05 04:57 GMT

சிவகங்கையில் கண் மை டப்பாவை விழுங்கி ஒரு வயது குழந்தை இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை காளவாசல் பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஸின் ஒரு வயது மகன் தரண்தேவா. பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக செல்வதற்காக தரண்தேவாவுக்கு அவரது தாய் பவுடர் அடித்துவிட்டு அடுப்படி சென்றுள்ளார். அப்போது, கண் மை டப்பாவை வாயில் வைத்ததால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே வெளியே எடுக்க குழந்தையின் தாய் முயன்ற போது, டப்பாவை குழந்தை விழுங்கியுள்ளது. உடனே ரத்தக்கசிவு ஏற்பட்டதும், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கண் மை டப்பாவை விழுங்கி குழந்தை இறந்தது, உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்