பொன்னேரி அதிமுக பிரமுகர் கொலையில் அதிர்ச்சி திருப்பம்.. கூலிப்படையின் குலைநடுங்கும் வாக்குமூலம்

Update: 2024-03-26 09:10 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஊராட்சி மன்ற தலைவரை போலீசார் கைது செய்தனர்.

Vovt

பொன்னேரியை அடுத்த விச்சூர் ஊராட்சி மன்றத் துணை தலைவர் வைதேகியின் கணவரும், அதிமுக நிர்வாகியுமான சுமன் என்பவர், மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், இந்த சம்பவத்தில் முக்கிய நபராக, அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சங்கரை கைது செய்யக்கோரி, அப்போது உயிரிழந்த சுமனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்