"CM-க்கு நல்லா தெரியும், சார் நல்ல முடிவு எடுப்பார்.."CM செல்லுக்கு சென்ற பெலிக்ஸின் மனைவி

Update: 2024-05-16 10:50 GMT

பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் மீதான குற்ற வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவரது மனைவி ஜேன் ஆஸ்டின் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார்.

தனது வழக்கறிஞர்களோடு தலைமைச்செயலகம் வந்த பெலிக்ஸின் மனைவி ஜேன்ஆஸ்டின், முதலமைச்சர் தனிப்பிரிவில் உள்ள அதிகாரிகளை சந்தித்து மனு வழங்கினார். அந்த மனுவில், பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் மீதான குற்ற வழக்குகளைத் திரும்ப பெற்று, பெலிக்ஸ் சிறையில் இருந்து விடுதலை பெற வழிவகை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெலிக்ஸ் விவகாரத்தில் தாம் அளித்த மனு மீது முதலமைச்சர் ஸ்டாலின் நல்ல முடிவு எடுப்பார் என நம்புவதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்