சிறுத்தையின் உயிரை பறித்த பாமக நிர்வாகி - பாடம் புகட்டிய வனத்துறை

Update: 2024-10-02 06:14 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில், பாமகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 3 பேர், கைது செய்யப்பட்டனர்.கொளத்தூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ஆடு, மாடுகளை, கொன்றதாக கூறி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமைக்கிழமையன்று, சின்னப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சிறுத்தை உயிரிழந்து இருந்ததை பார்த்து, உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்தனர். அதில் சிறுத்தை துப்பாக்கியால் சுடப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், பாமகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரின் கணவருமான முனுசாமி மற்றும் அதே பகுதியை சேர்ந்த சசி, ராஜா ஆகிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்