சீசிங் ராஜா உடலுக்கு சண்டை போடும் 5 மனைவிகள் - யாரும் எதிர்பாரா சிக்கல்

Update: 2024-09-23 13:19 GMT

ரவுடி சீசிங் ராஜாவை ஆந்திராவில் வைத்து கைது செய்திருந்த போலீசார், கைது செய்த சில மணி நேரங்களிலே என்கவுன்ட்டரில் சுட்டு கொலை செய்தனர். இந்நிலையில், உடற்கூராய்வுக்காக சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சீசிங் ராஜாவின் உடல் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சீசிங் ராஜாவின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். சீசிங் ராஜா சட்டப்படி திருமணம் செய்து கொண்ட ஜானகி என்பவரிடம், உடற்கூராய்வு அறிக்கையில் கையெழுத்திடுவது குறித்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இந்நிலையில், அங்கு சீசிங் ராஜாவின் நான்கு துணைவிகளும் உடலுக்கு உரிமை கோரி வருவதால் உடலை வழங்குவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, 4 துணைவிகளில் ஒருவர் வழக்கறிஞர் எனவும், அவர் சட்டப்படி உடலை பெறுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருதாகவும் சொல்லப்படுகிறது....

Tags:    

மேலும் செய்திகள்