பைக்கில்வித்தை காட்டிய 2கே கிட்ஸ் - பெற்றோர்களை வர வைத்து சிறப்பான சம்பவம் செய்த போலீசார்

Update: 2024-07-01 14:19 GMT

குளச்சல் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை தோட்டியோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்... அப்போது பொதுமக்களைத் தொந்தரவு செய்யும் வகையில் அதிவேகமாகவும், அதிக சத்தத்தை எழுப்பிக் கொண்டும், விதியை மீறும் வகையிலான நம்பர் பிளேட்டுடன் வந்த இருசக்கர வாகனங்களுக்கு தலா 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது... விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன... சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு செய்த 12 சிறார்களை பிடித்து அவர்களிடம் இருந்த 7 பைக்குகளை பறிமுதல் செய்ததோடு அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டது. மேலும் இந்த நடவடிக்கை தொடரும் என மாவட்ட கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்