`ஸ்கெட்ச்' போட்டு வந்தவரை- அலேக்கா தூக்கிய மக்கள் -பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-10-18 11:21 GMT

வீடுகளை நோட்டமிட்டுத் திருடுவதற்கு முயன்ற நபரை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர்அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு வந்து இருக்கிறார். பின்னர் அப்பகுதியில் உள்ள ஆள் இல்லாத வீட்டில் திருட முயன்ற போது அவரை பொது மக்கள் பிடித்துத் தாக்கியுள்ளனர். பின்னர் அந்த நபரை இரு சக்கரவாகனம் மூலமாக அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்