ராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே காலி மது பாட்டில்களை ஏற்றிவந்த மினிவேன் காருடன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சாலை முழுவதும் கண்ணாடி துண்டுகள் சிந்தி சிதறின. உடனடியாக துடைப்பம் கொண்டு கண்ணாடி துண்டுகளை போக்குவரத்து போலீஸ்காரர் அப்புறப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.