புரட்டிபோட்ட மழை... வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்... கடும் அவதியில் மக்கள்

Update: 2024-10-25 01:39 GMT

புரட்டிபோட்ட மழை... வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்... கடும் அவதியில் மக்கள்

சேலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அழகாபுரம், புதூர், அன்னை தெரசா நகர் பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. இப்பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய் ஏதும் இல்லாததால் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள தண்ணீர் வெளியேற வழியின்றி ஒரு வாரத்திற்கும் மேலாக குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மேலும், பல நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளதால், துர்நாற்றம் வீசுவதோடு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீடுகளுக்குள் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்