சொத்து கேட்டு டார்ச்சர் செய்த மகன்... எமனாக மாறி மூச்சை நிறுத்திய தந்தை

Update: 2024-09-28 10:54 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தாங் கோட்டை வாடிக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மூத்தமகன் இன்பரசன் இரண்டு ஆண்டுகள் சிங்கப்பூரில் வேலை செய்துவிட்டு மூன்று மாதத்திற்கு முன்பாக சொந்த ஊர் திரும்பினார். கடந்த சில காலமாக, தனக்கு உண்டான சொத்தை பிரித்துக் கொடுக்குமாறு இன்பரசன், தன் தந்தை செல்வராஜிடம் மது போதையில் தகராறு செய்துள்ளார். இந்த நிலையில், செல்வராஜ் தனது நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்த போது, மகன் இன்பரசன் சொத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பமாக மாறியது. ஆத்திரமடைந்த செல்வராஜ் மற்றும் உலகநாதன் இருவரும் சேர்ந்து சுத்தியலால் இன்பரசனின் தலையில் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த இன்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், இன்பரசனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் செல்வராஜ் உண்மையை ஒப்புக் கொண்ட நிலையில், கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்