கர்ப்பிணி பெண்ணை ஏற்றாமல் சென்றதால் பஸ்ஸை நிறுத்தி சம்பவம் செய்த நபர் - வைரலாகும் வீடியோ

Update: 2024-09-24 16:54 GMT

பொள்ளாச்சி அருகே கர்ப்பிணியை அரசு பேருந்தில் ஏற்றாமல் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் செல்லும் தடம் எண் 10-பி பேருந்தில் செல்வதற்கு அங்கலக்குறிச்சி தபால் நிலைய பேருந்து நிறுத்தத்தில் நிறைமாத கர்ப்பிணி உள்ளிட்ட சிலர் காத்திருந்தனர். அவ்வழியாக வந்த அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் இதை கவனித்த ஒருவர், பேருந்து திரும்பி வந்தபோது, வழிமறித்து ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அங்கு பேருந்து நிறுத்தம் இருப்பது தனக்கு தெரியாது என்றும், அந்த வழித்தடத்தில் தாம் புதிதாக பேருந்தை இயக்குவதாகவும் பேருந்து ஓட்டுநர் தெரிவித்ததார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்