மன நலம் குன்றியவரை... கட்டி வைத்து அடிக்கும் இளைஞர்கள் - கண்கலங்க வைக்கும் காட்சி

Update: 2024-07-01 15:44 GMT

பெரம்பலூர் அருகே, மன நலம் பாதிக்கப்பட்டவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதும், அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் நாவலூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தாக்கப்பட்ட இந்த சம்பவத்தில், இளைஞர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. கேட்டரிங்கில் டிப்ளமோ படித்திருந்த வெங்கடேசன், வேலை வாய்ப்புக்காக சிலரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் மன நலம் பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், வெங்கடேசனை தொடர்ச்சியாக கை, கால்களை கட்டிப்போட்டு அப்பகுதி இளைஞர்கள் சிலர் அடித்து துன்புறுத்தி வந்த நிலையில், தற்போது அது தொடர்பான வீடியோ வெளியாகி மனதை பதற வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்