மகிஷாசூரனை ஆக்ரோஷத்துடன் வதம் செய்த பத்திரகாளியம்மன்.. சிலிர்த்து நின்ற பக்தர்கள்

Update: 2024-10-13 09:11 GMT

நெல்லை மாவட்டம் பணகுடி பத்திரகாளியம்மன் கோவிலில், தசரா திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. பூஞ்சப்பர வாகனத்தில் அட்டக்காளி அவதாரத்தில் எழுந்தருளிய பத்திரகாளி அம்மன், மகிஷாசூரனை வதம் செய்தார். பின்பு அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்கார தீபாராதனை பூஜை நடந்தது. முன்னதாக கோயிலில் கொலு மண்டபம் வைக்கப்பட்டு பஜனையுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்