சைக்கிளிலே உலா வரும் தாய், மகன்...என்னவென்று கேட்ட மக்களுக்கு அதிர்ச்சியும் சோகமும்

Update: 2024-10-23 09:39 GMT

சைக்கிளிலே உலா வரும் தாய், மகன்...என்னவென்று கேட்ட மக்களுக்கு அதிர்ச்சியும் சோகமும் - பார்த்தால் உங்களுக்கும் கண்ணீர் வரும்

நெல்லை மாவட்டம் கொக்கிரக்குளம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயை சைக்கிளில் வைத்துக்கொண்டு அலையும் மகனின் செயல் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொக்கிரக்குளம் பகுதியில் ஒரு நபர் ஒரு மூதாட்டியை சைக்கிளில் வைத்துக்கொண்டு அலைந்து திரிகிறார். அப்பகுதி மக்கள் இது குறித்து விசாரிக்கையில், மூதாட்டி அந்த நபரின் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் என தெரியவந்தது. அவர்களுக்கென்று யாரும் இல்லை என்றும், எங்கு போவது.. என்ன செய்வது.. என்று தெரியாமல் சுற்றி வருகிறார்கள் என்பதும், தெரியவந்தது. மேலும், அந்த நபரும் மனநலம் சரியில்லாதவர் போல் பேசுவது, விசாரித்த பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

Tags:    

மேலும் செய்திகள்