வடமாநில இளைஞரை சுட்டு பிடித்த போலீஸ்... வெளியான முக்கிய தகவல்

Update: 2024-10-04 04:27 GMT

நாமக்கல் மாவட்டத்தில், போலீசார் சுட்டு பிடித்தபோது காயமடைந்த வடமாநில இளைஞர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். கேரளாவில் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்து விட்டு வந்த மேவாட் கொள்ளை கும்பலை, கடந்த 27ஆம் தேதி, நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்தனர். போலீசாரின் என்கவுன்ட்டரில் ஜமாந்தீன் என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த ஆசர் அலி என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆசர் அலியின் வலது காலில் நரம்பு பாதிப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் கால் எடுக்கப்பட்டது. அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்