40 உயிர்களுடன் சிக்கிய காலேஜ் பஸ்... நாமக்கல்லில் திக்..திக்.. | Rainfall | namakkal

Update: 2024-10-22 08:53 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீரில் கல்லூரி பேருந்து சிக்கி கொண்டதால் மாணவர்கள் அவதியுற்றனர். பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழை காரணமாக காவேரி ரயில் நிறுத்தம் நுழைவுப் பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. சுமார் 5 அடி முதல் 6 அடி வரை தண்ணீர் நின்றதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கோபிசெட்டிபாளையத்தில் 40 மாணவர்களுடன் வந்த தனியார் கல்லூரி பேருந்து தேங்கி கிடந்த மழைநீரில் மாட்டிக்கொண்டது. இது குறித்து, தகவல் அறிந்த தனியார் கல்லூரி நிர்வாகம் உடனே மாற்று பேருந்தை அனுப்பி வைத்து மாணவர்களை மீட்டு கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். ஈரோடு - நாமக்கல் மாவட்டம் பிரதான பாதையில் மழைநீர் தேங்குவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்