முதுமலை காட்டில் கேட்ட பயங்கர சத்தம்...நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-09-15 05:34 GMT

முதுமலை தெப்பக்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து இரும்பு குழாய்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, தெப்பக்காடு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்